ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel
பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெயர் எப்போது கேள்விப்பட்டேன் என்று சரியாக தெரியவில்லை. கண்டிப்பாக என் பள்ளியிலும் வீட்டிலும் கிடையாது. எனக்குச் சிறுவயதில் பெரியார் என்றால் கடவுள் எதிர்ப்பாளர் திமுக காரர் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன் எப்போது ஒரு நாள் தினத்தந்தி நாளிதழில் சிறுவர்-காக பக்கம் வரும் அதில் பெரியார் பற்றி ஒரு செய்தி வந்து இருந்தது. அது அனைவரும் கேள்விப்பட்டு இருக்கும் கதை தான். பெரியார் மாட்டுவண்டியில் பயணம் செய்து கொண்டு இருக்கும் பொது அவர் மீது செருப்பு வீசப்பட்டது சிறிது தூரம் சென்றபிறகு வண்டியைச் செருப்பு வீசப்பட்ட இடத்துக்குத்