Posts

Showing posts with the label Quotes

எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள் - ( S. Ramakrishnan Quotes )

Image
கோப்பு: தேசாந்திரி பதிப்பக விழா -  25.12.2012 எஸ். ராமகிருஷ்ணன் மேற்கோள்கள். ( S.Ramakrishnan Quotes). தமிழில் ஒரு முன்னணி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ண்ன் . இவருடைய Quotes எங்கு தேடியும் கடைக்கவில்லை.  ஆங்கிலத்தில் உள்ள்து போல தழிழ் எழுத்தாளர் Quotes கிடைக்கவில்லை தான். அதான் நானே இதில் இறங்கி முடிந்தவரை சேகரித்து பதிவு செய்துஉள்ளேன். இது கொஞ்சம் தான் என்று தெரியும் இப்போதிக்கு இதை பதிவு செய்கிறென். முடிந்தவரை Update செய்றன். நீங்களும் எனக்கு அனுப்பலாம், அதையும் நான் Update செய்கியிறேன்.  தாயின் ஆசைகள் வெளிப்படாதவை. அவை நதியினுள் உறைந்துவிட்ட கூழாங்கற்கள். நீர் வற்றிய பிறகு தான் கூழாங்கற்கள் வெளியே தெரிகின்றன. அது போல தான் ஆம்மாவின் ஆசைகளும்! அவை வெளிபடாமலே ஒளிந்து கிடக்கின்ற்ன். வயதாகிப்போவதன் முதல் அடையாளம் அவமானங்களை சகித்துக் கொள்வதுதான். உலகில் போர் கருவிகளுக்கு எந்த நாடும் தடை விதித்ததில்லை புத்தகங்களுக்குத் தான் தடை விதித்தார்கள். இந்த உலகில் மிகவும் கனமான பொருள் எதுவென்று கேட்டால் புரிந்துகொள்ளப்படாத மவுனம் என்பேன். ’சக்கரவர்த்தி திருமகள்’ பட...

பெரியாரின் பழமொழிகள்

Image
ஓவியம்  - ஹாசீப்கான் (Hasif Khan) ஜனநாயகம் என்பது தலையை எண்ணுவது தானே தவிர தலைக்குள் இருக்கும் சரக்கை எண்ணுவது அல்ல! என்னை சட்டசபைக்குப் போகச் சொல்கிறார்கள். அங்கே போய் ஒன்றும் சாதிக்க முடியாது. வெளியில் இருந்து கொண்டுதான் பாழடைந்த கட்டடத்தை இடிக்க வேண்டுமே தவிர, உள்ளே இருந்து இடித்தால் நம் தலையில் தான் அது விழும்! நீதியை மதிக்கிறேன். ஆனால் நீதிமன்றத்தை மதிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு இல்லை! எனது பலக்குறைவினால் பல குறைகள் நேர்ந்தாலும் பொதுவாழ்வில் நான் சாகாமல் இருக்க நேர்மையில் நான் காட்டும் ஜாக்கிரதை தான் காரணம்! நான் சொல்வதை அப்படியே நம்பிவிடாதீர்கள். எனது பகுத்தறிவு சரி என்று சொல்வதை நான் சொல்கிறேன். நீங்கள் உங்கள் பகுத்தறிவு சரி என்று சொல்வதை மட்டும் ஏற்றுக் கொள்ளுங்கள். தண்ணீர் எவ்வளவுதான் சூடாக ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் முடியும். எரிய வைக்க முடியாது! எந்தவிதமான உணர்ச்சிக்கும் இடமில்லாத மானத்தைப் பற்றிக் கவலைப்படாத மனிதர்களிடம் நல்லபெயர் வாங்க வேண்டும் என்ற கவலை எனக்குச் சிறிதும் இல்லை. அப்படி போலி நல்ல பெயர் மீது என் வாழ்வு ஏற்பட்டிருக்கவில்லை...