Posts

Showing posts with the label karunanithi

ஏன் பெரியார் என்ற பெயர் உங்களுக்கு உறுத்துகிறது ? - The Dravidian Rebel

Image
                                                                                                                                                                                                               பெரியார் என்றால் எனக்குள் எப்போதும் ஒரு கர்வம் வருவது உண்டு காரணம் அவர் ஆற்றிய பணிகள் மற்றும் அவர் இருந்த நேரத்தில் அவர் செய்த விஷயங்கள் ஒரு போராட்டமாக இருந்து இருக்கும் அது நாம் கற்பனை செய்வது போல எளிமையாக இருந்து இருக்காது. எனக்கு முதன் முதலில் பெரியார் என்ற பெய...

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நினைவு நாள் - சிவசங்கர் எஸ்.எஸ் #Shared

Image
இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டம் பொது 12 மாவிரன்கள் உயிரை விட்டனர். அதை பற்றி ஒரு சிறய கட்டுரையை திமுக MLA எஸ்.எஸ். சிவசங்கர் முகநூலில் எழுதிஉள்ளார் அதை நான் SHARE செய்யுது உள்ளேன் இங்கு.                             அது 1964ஆம் ஆண்டு, ஜனவரி மாதத்தின் முதல் வாரம். அன்றைய முதல்வர் பக்தவச்சலம் அவர்கள் தென்மாவட்ட சுற்றுப்பயணம் முடித்துக் கொண்டு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கி, காருக்கு செல்கிறார். அப்போது ஒரு 25 வயது வாலிபன், முதல்வர் பக்தவச்சலம் காலில் விழுகிறான். "அய்யா முதல்வர் அவர்களே, வருகிற 26ம் தேதியிலிருந்து மத்திய அரசாங்கம் இந்தியை இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவித்து, தமிழை இரண்டாந்தர மொழியாக ஆக்கி அழிக்கப் போகிறது. தயவுசெய்து முதல்வராகிய நீங்கள் தலையிட்டு இந்தியை தடுத்து நிறுத்தி, தமிழைக் காப்பாற்றுங்கள். தமிழர் என்ற முறையில் தமிழைக் காப்பாற்றுங்கள்", என கெஞ்சினான் முதல்வரிடம். முதல்வர் பக்தவச்சலம் காவல்துறையினரைப் பார்த்து," இந்தப் பைத்தியத்தை கைது செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்...

கருணாநிதி 90 - ப.திருமாவேலன் #Throwback

Image
தி ருவாரூர் தியாகராஜர் கோயில் தெப்பக் குளத்தின் கரையில் இரண்டு சிறுவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். 'வா... நீந்தி அந்தக் கரைக்குப் போவோம்’ என்று ஒருவன் அழைத்தான். இருவருமே குதித்து நீந்தினார்கள். பாதி தூரம் கடந்ததும் இன்னொருவன் சொன்னான், 'என்னால் முடியாது. வா... திரும்பிவிடலாம்’ என்று. 'திரும் பிப் போகும் பாதித் தூரத்தை முன்னோக்கிப்போனால், அந்தக் கரையைத் தொட்டு வெற்றிஅடையலாம்’ என்றான் அந்தச் சிறுவன்! கட்சி ஆரம்பித்து சென்னையில் முதல் மாநில மாநாடு. எல்லோரும் மாநாட்டுத் தலைவரை அவரவர் மொழியில் வழிமொழிந்தார்கள். அந்த இளைஞர் கரகர குரலில், 'வாழ்வு மூன்றெழுத்து, வாழ்வுக்குத் தேவையான பண்பு மூன்றெழுத்து, பண்பிலே பிறக்கும் அன்புக்கு மூன்றெழுத்து, அன்பிலே சுரக்கும் காதல் மூன்றெழுத்து, காதல் விளைவிக்கும் வீரம் மூன்றெழுத்து, வீரன் செல்லும் களம் மூன்றெழுத்து, களத்திலே பெறும் வெற்றி மூன்றெழுத்து, வெற்றிக்கு நம்மை அழைத்திடும் அண்ணா மூன்றெழுத்து...’ என்றபோது மாநாடு குலுங்கியது! இந்திரா என்ற பிம்பமே இந்தியாவை அச்சுறுத் திக்கொண்டிருந்த நேரம் அது. 'எமர்ஜென்சியா?’ என்று...