கோபிநாத்தின் பத்து பொன்மொழிகள் - சுஜாதா 2.0






நீயா நானா கோபிநாத் அவர்கள் ஆங்கில புத்தாண்டு போது பத்து பொன்மொழிகள் கொண்ட ஒரு படத்தை தனது சமூகவலை தளங்களில் பதிவேற்றம் செய்து இருந்தார். அது மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த 10 பொன்மொழிகளும் எழுத்தாளர் சுஜாதா இளைஞர்களுக்கு சொன்ன 10 கட்டளைகள் போலவே உள்ளன.

சுஜாதா ஒரு Legend , So அவரால், அவர் எழுத்துக்களால் அவருக்கு தமிழர்கள் அடிமை. அதனுடைய பாதிப்பாக கூட இருக்கலாம். கோபிநாத் was a சுஜாதாவின் வெறித்தனமான ரசிகர்.

Already, கோபிநாத் எழுதிய புத்தகங்கள் பயங்கர HIT என்றே சொல்லவேணும். Youtubeல அவரோட speech videos தான் நிறைய views இருக்கு. சில மாதங்களுக்கு முன்னாடி கூட அவோரட தோனியா பற்றிய ஆடியோ clip , Whatsapp-ல பயங்கர ஹிட்!!!
அவர் எழுதிய நேர் நேர் தேமா புத்தகம் , ரொம்ப பிடிக்கும். அதில் அவர் பெரிய ஆளுமையுகளுடன் பேட்டி எடுத்த அனுபவங்களைப் பகிர்ந்து இருப்பார். மிகவும் அற்புதமான புத்தகம்.
Chennai book fair-ல அதிகமாக விற்ற புத்தகங்களிலும் இதுவும் ஒன்று.

என்னதான் சுஜாதா சொன்னாலும் இன்றைய தலைமுறையில் இருக்கும் மனிதர் சொன்னால் இன்னும் எளிதாக இளைஞர்கள், மக்கள் இடையே சிக்கரம் சென்ற அடையும். அதற்காக கோபிநாத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

கோபிநாத் சொன்ன அறிவுரைகள் மற்றும் சுஜாதாவின் 10 அறிவுரைகளை
கீழே ,

கோபிநாத் சொன்ன 10 அறிவுரைகள் -



சுஜாதாவின்  இந்த 10 கட்டளைகளை -

1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,உழைப்பு, வெற்றி இப்படி எதாவது. நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக்கொண்டிருக்கிறது.
 2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்துபாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் 100 கிராம் காப்பி பவுடர் (அ)ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும்  மதிய ஷோ  போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண  வேண்டிவரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச் சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம்,ஒளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்டதலைவர்களுக்காகவும் விரயம்செய்யாதீர்கள். 
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக் கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில்,யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். 
6. இந்தத் தகவல்களைப் படிக்கும் நிலைமைபெற்ற நீங்கள், இந்திய ஜனத்தொகையின் ஆறு சதவிகித  மேல்தட்டு மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப்பாருங்கள். 
7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு  முக்கியம்.
8.எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால், எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றிவியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக சாப்பிடத்தோன்றும்.பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். 
9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப்போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
10. படுக்கப்போகும் முன் 10 நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம், நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது காலேஜில்  நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவதுதான்.

Comments

  1. Anonymous1:43 AM

    Good one by Gobinath.. I liked sujatha version much than Gopinath.

    ReplyDelete

Post a Comment